top of page

குறுங்கதைகள்

இன்னைக்கு நைட் இங்கதானே ஸ்டே.. டின்னர் நான் சமைக்கவா.. இல்ல வேண்டாம். உனக்கு ரொம்பப் புடிச்ச ஜப்பானீஸ் ஃபுட் ஆர்டர் பண்றேன். அந்த கொழைஞ்ச சோறும் பாதி வேகாத மீனும்..

என்று பதில் சொன்னேன்.

அதுக்குன்னு ஒரு பேரு இருக்கு. சூஷி.

டேய்.. எனக்கு இன்னைக்கு சூஷி சாப்பிடனும் போல இருக்குன்றது உனக்கு எப்படித் தெரிஞ்சுது.. சரி அதைவிடு . நான் கேட்டதுக்கு இன்னும் பதில் சொல்லலையே நீ.. அந்த பைக் ஆக்ஸிடெண்டுக்கு அப்புறமா நீ எதையோ பறி கொடுத்த மாதிரி தான் இருக்க.. எதுனாச்சும் ஏடாகூடமா ஆயிருச்சா உனக்கு அந்த ஆக்ஸிடெண்டுல..

சமயம் சந்தர்ப்பமே இல்லை டாக்டர். திடீர் திடீர்ன்னு தான் காட்சிகள் வருது. காட்சிகளில் வர்ற அந்த அமெரிக்க நகரத்துக்கு இது வரை நான் போனதே இல்லை. அந்த நகரமென்ன.. அமெரிக்காவுக்கே நான் போனதில்லை. ஆனால் அந்த தெருக்கள் தெருக்களிலுள்ள கட்டிடங்கள் அவற்றில் நியான் மற்றும் எல்ஈடியில் ஒளிரும் பெயர்கள் கூட எனக்கு அத்துப்படியாய் தெரிந்தவையாய் இருக்கிறன்றன.. எப்படி டாக்டர். ஹவ் ஈஸ் திஸ் பாஸிபிள்..

டாக்டரின் ஆச்சர்யம் மேலும் கூடியது.

ப்ரைம் ப்ளேஸ். சென்டராப்தி சிட்டி. ஒரு க்ரவுண்ட்டுக்கு மேலே இருக்குமா.. நீங்க ஒண்டியாளு.. என்ன பண்ணப் போறீங்க குமாரவேல். நல்ல விலை வந்தா பேசாம கொடுத்துருங்களேன்..

அதனாலதான கொடுக்க மாட்டேன்றேன். நா ஒண்டியாளு. எங்கப்பா நா பொறந்தப்ப ஸ்டேஷன் பக்கத்துல செண்ட் நூத்தி இருபது ரூபான்னு வாங்கிப் போட்டது..அப்ப ஊரு இப்படி பெரிசா இல்லை. இரயில்வே ஸ்டேஷன் ஊரை விட்டு வெளியே இருந்துச்சு.

இன்னிக்கு ஊருக்கு நட்ட நடுவுல இருக்கு குமாரவேல். உங்க வீட்டை சுத்தி வாங்கினவன்ல்லாம் ஷாப்பிங் காம்ளெக்ஸ் கட்டி வாடகைக்கு விட்டுட்டான். என்ன காசு தெரியுமா..

பஸ் ஸ்டாப் வந்துவிட்டது. என் கையிலிருந்த அவளது இரண்டாவது பையை வாங்க கை நீட்டினாள்.

கல்யாணமாகி ஏழு வருஷமாச்சு. இன்னைக்கு வரைக்கும் வீட்டுக்கு வந்தா என்னை வெறுங்கையா திரும்ப அனுப்புறதே இல்லை சித்தி. எங்கம்மா இருந்திருந்தா கூட இதெல்லாம் செய்வாளோன்னு தெரியலை. அவ மனசு நோகாம பாத்துக்கோடா.

ஏற்கனவே நொந்து போயிருக்கிற என்னோட மனசை என்ன செய்ய அக்கா..
கேட்க நினைத்தும் கேட்காமலேயே நின்றேன்.

பாவத்திலேயே பெரிய பாவம் எது தெரியுமா. பறவை கட்டின கூட்டைக் கலைக்கிறதுதான். என்று சொன்னான். இதற்கு என்ன பதில் சொல்வதென்றே எனக்குத் தெரியவவில்லை. அதனால் நான் அமைதியாக இருக்க, அவனே தொடர்ந்து பேசினான்.

நான் அந்தப் பாவத்தை இப்ப ரெண்டாவது தடவை செஞ்சுட்டேன் என்றான்.

எந்தப் பறவையாவது உங்க வீட்டுக்குள்ளே வந்து கூடு கட்டிருச்சா.. என்று நான் கேட்டேன்.

அவன் சிரித்தபடி சொன்னான். “இட்ஸ் அ மெட்டாஃபோர்”. மேலும் அவன் சொன்னான்.

CONTACT

Tel: 9810488582| Tel: 7011144631 | sureshbarathan@gmail.com

Sign Up for Stay Connected

Thanks for submitting!

Follow me:

  • Black Facebook Icon
  • Black Twitter Icon

© 2022 by Suresh Barathan

bottom of page