குறுங்கதைகள்

ஏன்டா.. எங்கடா போய்த் தொலைஞ்ச.. இந்த மூணு நாளா அந்தப் பிள்ளை எப்படித் தவிச்சுப் போச்சு தெரியுமா. நாந்தான் ஏங்கூட வா.. அந்தப் பய வீட்டுலேயே போய் பாத்துட்டு வருவோம்ன்னு கூட்டிட்டு வந்துருக்கேன்.. உள்ளதான் இருக்கா.. போய் பாரு.. பேசு..
என என் முதுகைப் பிடித்து வீட்டிற்குள் தள்ளினாள் இராஜியக்காள். உள்ளே விளக்கருகில் இருந்த ஸ்டூலில் சுபா கண்களில் கண்ணீரும் காதலுமாய் உட்கார்ந்திருந்தாள்.

பூதம் தன் கன்னத்தில் கையைத் தேய்த்துக் கொண்டு பிரசவ வார்டின் வராண்டாவில் முதன் முறைத் தகப்பனாகப் போகிறவன் நடப்பதைப் போல குறுக்கும் நெடுக்கும் நடந்தது.
பூதம்.. நீ நிதானமாக யோசித்துக் கொண்டிரு. நான் அந்த டாக்ஸ் ஈ-ஃபைலிங் வெப் சைட்டில் என்னுடைய பாஸ்வேர்டை மறந்து விட்டேன். அதை சரி பண்ணிக் கொண்டு வருகிறேன்.
ஆ.. நல்ல யோசனை.. நான் வேண்டுமானால் உனக்கு நீ மறந்து போன அந்த உன் பாஸ்வேர்டை ஞாபகப்படுத்தட்டுமா..
ஏய்.. நீ நெஜம்மாவே பூதந்தானா.. எனக்கென்னவோ சந்தேகமா இருக்கு.