top of page

குறுங்கதைகள்

எல்லா கனவுகளிலும் நான் வெவ்வேறு சூழ்நிலைகளில் வெவ்வேறு நபர்களுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருப்பேன். திடீரென்று ஒரு புலி வந்து என் மீது பாய்ந்து தன் முன்னங்கால் நகங்களினால் என்னை அடித்து கொன்று போடும். உடனே நான் பதறியடித்துக் கொண்டு தூக்கத்தில் இருந்து எழுந்து கொள்வேன்.

இப்படித்தான் எனக்கு கனவுகள் வருவதும் நான் இரவு தூக்கத்திலிருந்து விழிப்பதும் அடிக்கடி நடந்து கொண்டிருந்தது. அந்தக் கனவுகளைப் பற்றித் தான் கேட்டார் மருத்துவர்.

சொல்லுங்க.. இப்பல்லாம் உங்களுக்கு அடிக்கடி அதே மாதிரி புலி அடித்துக் கொல்கிற
கனவுகள் வருதா.. இன்னமும் பயந்து பயந்து முழிச்சிக்கிறீங்களா..

பொண்டாட்டி கூட இருந்தப்பவே எவ மாரைத் தொடலாம்ன்னு அலைஞ்சவம் அவ போன பின்னாடி சும்மாவா இருக்காம்..

விழுந்த அடி கொஞ்சமா நஞ்சமா அது அதுக்குள்ளாற மறந்தா போயிருக்கும்.. இல்லை இனிமே அங்க இங்க கைய வைச்சா மத்தவங்க தான் சும்மா இருப்பாங்களா. நாயடி பேயடி அடிச்சு சாவடிச்சிற மாட்டாங்க.. அந்த பயத்துல தான் மண்ணு மாதிரி அலையுதாம் போல..

சட்டையில் பெஸ்ட் சேல்ஸ் மேனாப்தி மன்த் வில்லையை மொதல்லேயே பாத்துருக்கனும்.. இல்லைன்னா இப்படித்தான்..

கண்ணாடிக் கதவுக்குள் மாட்டித் தொங்கிக் கொண்டிருந்த ப்ரேம்களை ஒவ்வொன்றாய் பார்த்தான். இருப்பதிலேயே விலை குறைவாய் இருந்ததே ட்ரிப்பிள் நைனுக்குத்தான் இருந்தது. மல்டி செயின் ரெஸ்டாரண்ட் போல செயின் கண்ணாடிக் கடைகளும் வந்து கஸ்டமர்க்ளின் பாக்கெட்டுக்குள் அல்லது டெபிட் அல்லது க்ரெடிட் கார்டுக்குள் உள்ள அத்தனை காசையும் சுலபத்தில் வழித்தெடுத்து விடுகிறார்கள்..

கோல்ட் மெம்பர்ஷிப் வாங்கிக்கோங்க சார். ஒரு வருஷத்துக்கு நைன் ஹண்ட்ர்ட் ப்ளஸ் ஜிஎஸ்டி.. எப்ப கண்ணாடி வாங்கினாலும் டொண்டி பர்ஸண்ட் டிஸ்கவுண்ட் கிடைக்கும்.

ரொம்ப நாளைக்கப்புறம் ஊரிலிருந்து கல்யாணியின் போன் வந்தது. வழக்கமான விசாரிப்புகளுக்குப் பிறகு, அமெரிக்காவிலிருந்து ரெங்கா வந்திருப்பதைச் சொன்னான். மனசோடு சாரலடித்தது.

என்னைப் பார்க்க வராதே என்று எத்தனை முறை உனக்குச் சொல்வது. திரும்பத் திரும்ப என்னைத் தேடிவந்து ஏன் தொல்லை பண்ணுகிறாய். நான் தான் உன்னைப் பிடிக்கவில்லை உன்னுடன் வாழப் பிடிக்கவில்லை என்னை விட்டு எங்காவது தொலைந்து போ என்று சொல்லிவிட்டேனே. உனக்கு ஏன் அது புரியவே மாட்டேன் என்கிறது..

என்னுடைய மனைவியை நான் அவளுடைய அலுவலகத்துக்கு தேடிப் போன போது அலுவலக கேண்டினில் ஒரு மூலை மேஜை நாற்காலியில் அமர்ந்து மெல்லிய குரலில் கேட்டாள். அல்லது திட்டினாள்.

நீயில்லாமல் வாழும் இந்த வாழ்க்கை தான் எனக்கு நிம்மதியைத் தருகிறது. அதையும் கெடுக்கவென்று அவ்வப்போது வந்துவிடுகிறாய்.

CONTACT

Tel: 9810488582| Tel: 7011144631 | sureshbarathan@gmail.com

Sign Up for Stay Connected

Thanks for submitting!

Follow me:

  • Black Facebook Icon
  • Black Twitter Icon

© 2022 by Suresh Barathan

bottom of page